2 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இருவர் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி இறங்குத்துறை வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியை பரிசோதித்த போதே இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 35 மில்லியன். கைது செய்யப்பட்டவர்கள் 39 மற்றும் 49 வயதுடைய கல்பிட்டி மற்றும் மட்டக்குளியை சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கல்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.