வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்ற சார்ஜன் ஒருவர் மின் கம்பமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர் தொலைவில் மோட்டார் சைக்கிளுடன் சடலமொன்று காணப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்,

 சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரால் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மிகிந்தலையை வதிவிடமாகக் கொண்ட 45 வயதான பொலிஸ் சார்ஐன் வசந்த சந்தன நாயக்க என்பரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.