தெலுங்கு சினிமாவில் அம்மா வேடங்களுக்கு புகழ் பெற்ற நடிகை சுதா பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்.

தந்தையின் நோயால் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை சுதா தனது கஷ்டமான வாழ்க்கையை பற்றி கூறி கண்ணீர் விட்டு அழுதார். அவர் கூறியதாவது...

டைமண்ட் ஸ்பூனில் தான் பிறந்து வளர்ந்தேன். பெரிய வீடுகள், வேலையாட்கள் மற்றும் மூன்று டிரைவர்கள் நிறைந்த தனது குழந்தைப் பருவ வாழ்க்கை மிகவும் அசாதாரணமானது.

நான்கு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். வீட்டில் நான் ஒரே மகள் என்பதால் நன்றாக வளர்த்தனர்.

அமிர்தம் என்ற பொருளில் என் தந்தை எனக்கு சுதா என்று பெயரிட்டார். ஆனால் விதி எங்களை பழிவாங்கிவிட்டது . தந்தைக்கு புற்று நோய் ஏற்பட்டதை அடுத்து எங்களின் சொத்துக்கள் அனைத்தும் கரைந்துவிட்டது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் அம்மா தாலியை விற்று எங்களுக்கு உணவளித்தார்.

எல்லாம் இருக்கிறது என்ற நிலையில் இருந்து ஒன்றும் இல்லாத நிலைக்கு வீழ்ந்தோம்.

ஆனால் அம்மா நாடகக் கலைஞராக இருந்ததால் என்னை நடிப்புத் துறைக்கு அழைத்து வந்தார். சினிமாவில் நுழைந்த பிறகு எனக்குப் பணமும் புகழும் கிடைத்தது.

குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியுடன் பல இன்னல்களையும் அனுபவித்தேன்.

நடிப்புக்கு பிறகு மீண்டும் நான் பல கடுமையான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.

டெல்லியில் ஒரு ஓட்டலைத் திறந்தேன். அதில் இருந்த பணம் அனைத்தும் தொலைந்துவிட்டது. ஒரே கையெழுத்தில் பலநூறு கோடிகளை இழந்து கடனாளியாகிவிட்டேன்.

ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறேன்.

இந்நிலையில் எனது ஒரே மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அங்கேயே குடியேறி விட்டான்.

என்னிடம் தகராறு செய்து சென்று விட்டான் என நடிகை சுதா கண்ணீர் மல்க கூறினார்.

ஏற்கனவே கணவர் தன்னை விட்டு பிரிந்து விட்டதாலும், மகனும் விலகி விட்டதாலும் நடிகை சுதா தனிமையில் இருக்கிறார்.

இவர் தெலுங்கில் இளையதலைமுறை நடிகர்கள் அனைவருக்கும் அம்மாவாக நடித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.