தென் மாகாணத்தின் பல பகுதிகளில் அரச வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் இருந்து பணத்தை திருடிய சந்தேகத்தின் பேரில் வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வெளிநாட்டவர்கள் கனேடிய மற்றும் பல்கேரிய பிரஜைகள் என தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் வைத்து இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, ஹிக்கடுவ, பத்தேகம ஆகிய இடங்களில் அமைந்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களின் கணினி கட்டமைப்புக்குள் ஊடுருவி மென்பொருள் அமைப்பை மாற்றி, இவர்கள் சுமார் ஒரு கோடி ரூபாவை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.