கொக்கலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷம் அடைந்ததால் 114 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.