அனைத்து வகையான மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று  அறிவித்துள்ளது.

ஒயின், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான வற் வரி 20% அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் மதுபானத்துக்கான வற் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மதுபானம் மீதான கலால் வரி 20% அதிகரிப்பு காரணமாக, 750ml அதிவிஷேட சாராயம் போத்தல் ஒன்றின் விலை 206 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

உள்நாட்டில் காய்ச்சப்படும் வெளிநாட்டு மதுபானம் ரூ. 266 ரூபாவாலும்,

 பியர் (Vol 4.8% – 625ml) 21 ரூபாவாலும் மற்றும் பியர் (Vol. 8.8% – 625ml) ரூ. 39 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகின்றன.

சிகரட் மீதான வற் வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.