இந்திப்பட உலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்( வயது34) கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையிலும் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.

ஆனாலும் சுஷாந்த் சிங் மரணத்தில் சர்ச்சை நீடித்தது.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற மர்மம் இன்றுவரை விலகவில்லை.

இந்நிலையில் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என உடல் பிரேதபரிசோதனை குழுவில் இருந்த கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் ரூப்குமார் ஷா கூறி உள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்....

சுஷாந்த் சிங்கின் கழுத்திலும் உடலின் பிற பாகங்களிலும் காயங்கள் இருந்தன.

இது தற்கொலை இல்லை. கொலை என என்னால் உடலை பார்த்தவுடனேயே ஊகிக்க முடிந்தது. விதிகளின் படி உடல் பிரேதபரிசோதனையை வீடியோ எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் எங்கள் மேலதிகாரி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டார் என கூறி உள்ளார்.

இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.