நேற்றைய தினம் கிறிஸ்ட்சர்ச்சின் Roto Kohatu ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏரியில் படகு கவிழ்ந்தபோது அதில் இருவர் இருந்தனர், ஆனால் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார்.

இதனையடுத்து குறித்த சம்பவத்திற்கு மாலை 6.50 மணியளவில் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

காணாமற்போன நபரை தேடும் பணியை பொலிஸ் தேசிய டைவ் பிரிவினர் இன்று மீண்டும் ஆரம்பித்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தை ஆதரிப்பதற்காக அவர்கள் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது அடையாளம் குறித்த எந்த தகவலையும் பகிரங்கமாக பகிர வேண்டாம் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.