நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' என்ற படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்தப்படத்தை முடித்ததும் இவர் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்திற்கான பணிகளை துவங்குவதில் மும்முரமாக இருந்தார்.

இதனை தொடர்ந்து அண்மையில் 'வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்தது.

அதனை தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படத்தின் ஸ்பெஷல் வீடியோ ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதனிடையில் பாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் அந்தப்படத்திலிருந்து சூர்யா விலகினார்.

இதனையடுத்து தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சரித்திர படமாக 10 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலாவின் 'வணங்கான்' படத்தைப் போலவே 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் சூர்யா விலகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தீயாக தகவல்கள் பரவி வருகிறது.

மேலும் 'வாடிவாசல்' படமே கைவிடப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதனிடையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் தாணு 'வாடிவாசல்' படம் டிராப் ஆனதாக பரவிய வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில், சூர்யா 'வாடிவாசல்' படத்திலிருந்து விலகவில்லை. அந்த தகவல் வெறும் வதந்திதான். யாரும் அதனை நம்ப வேண்டாம்.

படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மாதங்களில் அப்டேட்டுகள் வெளியாகும் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது சூர்யா ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.