கொழும்பு -கொள்ளுப்பிட்டி பகுதியில் விபத்​தொன்றை ஏற்படுத்தி விட்டு, டுபாய்க்கு தப்பிச் சென்ற 26 வயதான இளைஞர், நேற்று (12) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த வௌ்ளிக்கிழமை(10) காலை கொள்ளுபிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சொகுசு காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபர், அன்றைய தினமே டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு (12) 9.50 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.648 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர், குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன்,  கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று,  சந்தேகநபரை கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.