நேற்று முன்தினம் (06) ஆக்லாந்தின் வடக்கே உள்ள கிராமப்புற பகுதியில் வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் சோதனையின் போது 18 வயது பெண் ஒருவர் பொலிஸாரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

ஆபரேஷன் கோபால்ட் விசாரணையின் ஒரு பகுதியாக 
Warkworth இல் உள்ள ஒரு வீட்டில் மெத்தாம்பேட்டமைன் தயாரிப்பு இடம் பெற்றதை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லாயிட் ஷ்மிட் கூறுகையில்..

இந்த சோதனையில் மெத்தாம்பேட்டமைன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஒரு துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான வெடிமருந்துகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்‌ என்று அவர் கூறினார்.

இந்நிலையில் 18 வயதுடைய பெண் ஒருவர் பொலிஸாரை தடுத்து தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார்.