ஜப்பானைச் சேர்ந்த இஸ்ஸேயி சகாவா, கடந்த 1981 ஆம் ஆண்டு பாரிஸில் படித்து கொண்டிருந்தபோது ரெனே ஹார்ட்வெல்ட் எனும் டச்சு பெண்ணை தனது வீட்டுக்கு இரவு உணவு அருந்த வரச் சொல்லி இருக்கிறார். இருவருக்கும் இடையே பரிச்சயம் இருந்ததால் ரெனேவும் இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ரெனேவை துப்பாக்கியால் சகாவா சுட்டுக் கொன்று பின்னர் அந்த சடலத்துடன் உடலுறவு கொண்டு, உடலை துண்டு துண்டாக வெட்டி சாப்பிடத் துவங்கியுள்ளார்.

பலநாட்களாக ரெனேவின் உடலை சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த பாகங்களை பாரிஸில் உள்ள பூங்காவில் புதைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பாரிஸ் போலீசார் சகாவாவை கைது செய்தனர்.

அடிப்படையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், 1983 ஆம் ஆண்டில் அவர் பிரெஞ்சு மருத்துவ நிபுணர்களால் விசாரணைக்கு தகுதியற்றவராகக் கருதப்பட்டார்.

மற்றும் ஆரம்பத்தில் 1984 இல் ஜப்பானுக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஒரு மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டார்.

சகாவா ஜப்பானுக்கு நாடு கடத்தப்படும் போது, ஜப்பான் அரசாங்கம் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெனேவின் குடும்ப உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் சகாவா மனநிலை ஒழுங்கிண்மையால் இருப்பதால் அவரை கைது செய்யவோ அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியமோ இல்லை என ஜப்பான் அரசாங்கம் மறுத்தது.

இதையடுத்து ஜப்பானில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல் தான் செய்த கொலையை சகாவா எப்போதும் மறைத்ததில்லை. அவரது வழக்கு குறித்து பல்வேறு எழுத்தாளர்கள் நாவல் உள்ளிட்ட இலக்கியமாக படைத்தனர். அப்படி ஜப்பான் எழுத்தாளர் ஜுரோ காரா எழுதிய ‘சகாவாவிடம் இருந்து கடிதங்கள்’ எனும் நாவல், ஜப்பானின் உயரிய விருதை பெற்றது.

கொடூர கொலை, அது குறித்த வருத்தமின்மை சகாவாவை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு சகாவா பேட்டி அளித்தார். அப்போது பேட்டி எடுத்தவர் ஜப்பானிய பெண்ணின் படத்தை காட்டியபோது, ‘அந்த பெண் உண்ணுவதற்கு சுவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மோசமானதுடன் பக்கவாதம் ஏற்பட்டதால் சக்கர நாற்காலியில் முடங்கினார். அவரது கடைசி காலத்தை தனது சகோதரருடன் கழித்துவந்த நிலையில் 73 வயதான சகாவா நிமோனியாவால் கடந்த மாதம்  24 ஆம் திகதி உயிரிழந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.