இன்று காலை Tauranga வில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மாநில நெடுஞ்சாலை 29A இல், Maungatapu roundabout இற்கு வடக்கே சுமார் 1 கிமீ தொலைவில், காலை 6.35 மணிக்குப் பிறகு இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டாவது நபர் மிதமான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் அடுத்து சாலை மூடப்பட்டது, ஆனால் மாலையில் மீண்டும் திறக்கப்பட்டது.

பொறுமை காத்த வாகன சாரதிகளுக்கு பொலிஸார் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.