Taranaki இல் உள்ள Hāwera என்ற இடத்தில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கொலை விசாரணையைத் தூண்டியுள்ளது.

 இன்று அதிகாலை 2.30 மணியளவில் Albion வீதியில் உள்ள குறித்த வீட்டிற்கு  அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும், அங்கு நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து 34 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் இருந்த பெண் ஒருவர் பொலிஸாரின் விசாரணைக்கு உதவியாக இருந்தார்.

அதிகாரிகள் சம்பவ இடத்தல பார்வையிட்டு ஆய்வுகளை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பாக வேறு யாரையும் தற்போது தேடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.