நேற்றைய தினம் இரவு மத்திய வெலிங்டன் பல்பொருள் அங்காடிக்கு வெளியே ஒருவரை கத்தியால் குத்திய இளைஞர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நேற்றைய தினம் இரவு 8 மணிக்கு முன்னதாக Lambton Quay Countdown இல் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து‌ குற்றவாளி "விரைவாக" கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட‌ 23 வயதான இளைஞர் இன்று காலை வெலிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.