Bay of Plenty இல் உள்ள Whakatāne என்ற இடத்திற்கு வடக்கே உள்ள கிராமப்புற பகுதியான Matatā வில் தனியார் நிலங்களில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக வேட்டையாடிய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை பொலிசார் நேற்று இரவு கைது செய்தனர்

இதன்படி 19 வயதுடைய இருவர் மற்றும் 20 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கையில் இரண்டு மான்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலத்தில் சட்டவிரோத வேட்டையாடுதல் குறித்து கவலையடைந்துள்ளனர் என்று கிராமப்புற பதில் மேலாளர் மூத்த சார்ஜென்ட் டிரிஸ்டன் முர்ரே கூறுகிறார்.

மேலும் "சட்டவிரோதமான வேட்டையாடுதல், அப்பகுதியில் இருக்கும் மற்றவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது மற்றும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்." என அவர் மேலும் தெரிவித்தார்.