ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா வெடித்துச் சிதறியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிமலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சாம்பல் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.