ஆக்லாந்தின் Sandringham Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனக் படேல் என்ற 34 வயதான நபர் கடந்த புதன்கிழமை இரவு ரோஸ் காட்டேஜ் சூப்பரெட்டுக்கு வெளியே ஒரு கொள்ளையனை எதிர்கொண்டபோது கத்தியால் குத்தப்பட்டார்.

அவரது மரணம் தொடர்பாக ஏற்கனவே இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

துப்பறியும் இன்ஸ்பெக்டர் ஸ்காட் பியர்ட் கூறுகையில், 36 வயதுடைய நபர் மீது இப்போது கொள்ளைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் திங்கள்கிழமை ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என அவர் தெரிவித்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக ஒரு வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியதாக பியர்ட் கூறினார்.

இதனிடையே படேலின் இறுதிச் சடங்கு தெற்கு ஆக்லாந்தில் உள்ள Wiri இல் இன்று மாலை நடைபெறுகிறது.

Wiri இல் உள்ள Anns Funeral Home இல் பட்டேலின் இறுதிச் சடங்கிற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைக்கேல் வுட் ஆகியோரும் இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.