ஆக்லாந்து Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளையில் ஜனக் படேல் என்ற இந்திய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் New Lynn இல் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்படி 42 வயதான நபர் ஒருவரும் 34 வயது  வயதான நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

செய்யப்பட்ட 34 வயது நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

மோசமான கொள்ளைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் குறித்த நபரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து டிசம்பர் 14 ஆம் திகதி ஆக்லாந்து உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய இரண்டாவது நபர் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.