ஒடாகோவில் உள்ள Wanaka ஏரியில் இருந்து இன்று பிற்பகல் சடலம் ஒன்று மீட்கப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றிரவு 6.30 மணியளவில் இந்த ஏரியில் நீச்சல் வீரர் ஒருவர் காணாமல் போனதாகக் கிடைத்த தகவலுக்கு அவசர சேவைகள் பதிலளித்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் தேசிய நீர்மூழ்கிக் குழுவினர் சோதனை நடத்தினர்.
சிரேஷ்ட சார்ஜென்ட் கிறிஸ் ப்ரூக்ஸ் கூறுகையில்..
சடலத்தை முறையாக அடையாளம் காணும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், குறித்த சடலம் காணாமல் போன நீச்சல் வீரருடையது என காவல்துறை நம்புவதாக தெரிவித்தார்.
இதனிடையே காணமல் போன நீச்சல் வீரர் தென் கொரிய நபர் என்று ஊடகங்கள் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மரண விசாரணை அதிகாரி சார்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.