இந்தோனேசியாவில் நேற்றைய தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அங்குள்ள மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவானது.

நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே அதிர்ந்தது.

இதனையடுத்து 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கம் காரணமாக 162 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.