ஆக்லாந்தில் கடந்த வாரம் நண்பகலில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை Takanini என்ற இடத்தில் உள்ள Walters வீதி மற்றும் மேற்கு Tironui ஸ்டேஷன் வீதி இடையே ரயில் தண்டவாளத்திற்கு அருகே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் 41 வயதான ஒருவர் மீது சட்ட விரோதமான பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மனுகாவ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வார இறுதியில் ஒரு வீட்டில் தேடுதல் வாரண்ட் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன் விளைவாக உள்ளூர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் வாரிக் அட்கின் கூறுகையில், பாலியல் வன்கொடுமை புகார்களை பொலிஸார் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் இருந்த சாட்சிகளை பொலிஸார் தேடி வருவதாக அட்கின் கூறினார்.

"இந்த சம்பவம் பகல் நேரத்தில் நடந்தது, இந்த நேரத்தில் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவதை யாராவது பார்த்திருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என அவர் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 221116/5518 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.