தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.