விமான நிலையத்தில் பிறந்ததும் குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட பச்சிளம் குழந்தையின் தாயைக் கத்தார் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

கத்தாரில் இருக்கும் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் 02, 2020 அன்று, விமான நிலையத்தின் லாஞ்ச் சேவைப் பகுதியில் ஒரு பெண் பச்சிளம் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

 

சிட்னிக்குச் செல்ல கத்தார் ஏர்வேஸில் தயாராகிக் கொண்டு இருந்த பல பெண்கள் வலுக்கட்டாயமாக கீழே இறக்கப்பட்டு ஆம்புலன்ஸுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி, அவர்கள் சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளனரா என்று சோதனை செய்யப்பட்டது.

 

ஏன் இப்படிச் செய்கிறார்கள் என பெண்களுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த விவரங்களும் சொல்லப்படவில்லை. ஏன் சோதனைக்கு உள்படுத்தப்படுகிறோம் என்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதற்கு சம்மதத்தை வழங்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை அந்த பெண்கள் குற்றம் சாட்டினார்.

 

ஆனால் அந்தக் குழந்தையின் தாய், குழந்தையை கைவிட்டுவிட்டு வேறு ஒரு நாட்டுக்கு பறந்து சென்றுவிட்டார்.

 

இந்த குழந்தையின் தாயையும் இப்போது கத்தார் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். தாய் ஓர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். இந்த குழந்தையின் தந்தையையும் கண்டுபிடித்துள்ளனர். இவரும் ஓர் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர். இருவருக்கும் இடையில் தவறான உடல் ரீதியிலான உறவு முறை இருந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது.

 

அந்தக் குழந்தையின் தந்தை குழந்தையின் தாயுடன் உறவு கொண்டதை ஆமோதித்து இருக்கிறார். அத்தோடு, குழந்தையின் தாய் குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர் ஒரு செய்தி உடன் புதிதாகப் பிறந்த பச்சைக் குழந்தையின் படத்தை தந்தைக்கு அனுப்பி இருக்கிறார்.

 

இப்போது குழந்தையை கத்தார் அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.