உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

இதற்கு கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை பிரதான காரணமாக உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியானது சர்வதேச நாடுகளை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது..

அமெரிக்காவில் பண்டிகை விடுமுறை காலம் வரும் நிலையில், மக்கள் புதிய கார்கள், டிவிக்கள், பிரிட்ஜ் போன்ற பொருள்களை வாங்க வேண்டாம்.

அமெரிக்கா மந்த நிலையை நோக்கி செல்கிறது. எப்போது வேண்டுமானாலும் பிரச்னை தலைதூக்கலாம். எனவே பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மிகப்பெரிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என நினைத்தால், அதை ஒத்திப்போடுங்கள். நிலைமை எப்படி இருக்கிறது என்று கவனித்து பார்த்து பின்னர் முடிவெடுங்கள்.

வாகனம், பிரிட்ஜ் என்று மற்ற எந்த பொருள்களாக இருந்தாலும் இதையே பின்பற்றுங்கள்" என்று எச்சரித்துள்ளார். பல முன்னணி நிறுவனங்களின் பணிநீக்க நடவடிக்கைகளையும் உதாரணம் காட்டி ஜெப் தனது அறிவுரையை பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து அமேசான் நிறுவனத்தின் தலைவரே பொருள்களை யோசித்து வாங்குங்கள், பணத்தை சேமித்து வையுங்கள் எனக் கூறியுள்ளது விவாத பொருளாக மாறியுள்ளது.