கடந்த வாரம் நேப்பியரில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நபர் அடுத்த மாதம் நகர உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை Marewa புறநகர் பகுதியில் Nuffield Avenue என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அரோஹைனா ஹெனாரே என்ற 34 வயதான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சனிக்கிழமை பிற்பகல், குறித்த பெண்ணுக்கு தெரிந்தவர் என கூறப்படும் 48 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருடைய பெயரை வெளியிடாமல் இருப்பதற்கான தற்காலிக அனுமதியை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இதனையடுத்து காவலில் வைக்கப்பட்ட அவர், டிசம்பர் 9ஆம் திகதி நேப்பியர் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதனிடையே சம்பவம் நடந்த வீட்டை சுற்றி பொலிஸ் சுற்றிவளைப்புகள் காணப்பட்டதுடன் குறித்த வீட்டில் உள்ள கடிதப் பெட்டியில் மலர்கள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.