நேற்று காலை கிறிஸ்ட்சர்ச்சில் பொலிஸ் காரை திருடிய நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்ட்சர்ச்சின் Hoon Hay புறநகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் குற்றவாளி பொலீஸ் பிரிவை சேர்ந்த நாய்களைக் கையாளும் அதிகாரியின் வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இச் சம்பவத்திற்கு முன்னதாக குற்றவாளியை பொலீஸ் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த கார் பின்னர் Albans தெருவில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் பொலீஸ் ஐடி மற்றும் பெட்ரோல் அட்டை திருடப்பட்டது.

"இந்த சம்பவத்தின் முழு சூழ்நிலையை கண்டறிய உள்ளக விசாரணை இப்போது நடந்து வருகிறது" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் நியூசிலாந்து ஹெரால்டுக்கு தெரிவித்துள்ளார்.