வெள்ளிக்கிழமை காலை Napier இல் உள்ள Marewa என்ற இடத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் Nuffield Avenue வில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலை 4.25 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

Marewa வை சேர்ந்த 34 வயதான அரோஹைனா ஹெனாரே என்ற பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று பிற்பகல், பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த 48 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இப்போது அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

அவர் நாளை Hastings மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என கூறப்படுகிறது.