கிறிஸ்ட்சர்ச்சில் நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பொலீஸ் நாயை கையாளும் அதிகாரியின் வாகனத்தை திருடி, அதை பயன்படுத்தி தப்பிச் சென்றார்.

சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நபரை இன்னும் தேடி வருவதாகவும், என்ன நடந்தது என்பதற்கான முழு சூழ்நிலையை அறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அதிகாரி Hoon Hay‌ இல் நடந்த ஒரு சம்பவத்தில் கலந்து கொண்ட போது கார் திருடப்பட்டது.

பின்னர் St Albans என்ற இடத்தில் உள்ள  Sheppard Place இல் காலை 8 மணியளவில் வாகனம் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது பெட்ரோல் கார்டுடன் அதிகாரியின் அடையாள அட்டை திருடப்பட்டது, இருப்பினும் வேறு எந்த காவல்துறை பொருட்களும் அல்லது உபகரணங்களும் எடுக்கப்படவில்லை‌ என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனம் இப்போது இழுத்துச் செல்லப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.