இன்று பிற்பகல் கிறிஸ்ட்சர்ச் அருகே உள்ள Lyttelton என்ற இடத்தில் ஒரு வீடு தீக்கிரையாகி உள்ளது.

வீட்டிலிருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் பரவியதால் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீ தற்போது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.

நான்கு டிரக்குகள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டன என தீயணைப்பு மற்றும் அவசரநிலை நியூசிலாந்து தெரிவித்தது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏதும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.