Rotorua வில் நேற்றைய தினம் இரவு மது அருந்தி வாகனம் ஓட்டிய 18 பேர் பிடிபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Rotorua சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் Six60 இன் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு குறித்த பகுதியில் இரண்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுமார் 968 ஓட்டுநர்கள் நிறுத்தப்பட்டு மூச்சு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 18 பேர் சட்ட வரம்பை மீறி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

அவர்களில் ஏழு பேர் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 75 நிமிடங்களுக்கு முன்பு பிடிபட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகன ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.