ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான கிழக்கு Tamaki இல் நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்தால் படுகாயமடைந்துள்ளனர்.

பலத்த கத்திக்குத்து காயங்களுடன் மூன்று பேரும் அதிகாலை 4:30 மணியளவில் மிடில்மோர் மருத்துவமனைக்கு வந்தடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் ஒருவருக்கு பலத்த துப்பாக்கிச் சூடு காயமும் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த சம்பவம் Highbrook Drive பகுதியில் உள்ள Lady Fisher Place கார் பார்க்கிங்கில் நடந்ததாக Counties Manukau CIB இன் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டோஃபிலாவ் ஃபாஅமானுயா வாஏலுவா கூறினார்.

மேலும் "நாங்கள் விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் முன்வருமாறு காவல்துறை கேட்டுக் கொள்கிறது." என அவர் தெரிவித்தார்.