வைகாடோவின் ஐந்தாவது பெரிய நகரமான Tokoroa வில் கார் ஒன்று மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து தீவிர விபத்து பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை 1 மணியளவில் Bridge தெருவில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் குறித்த விபத்தில் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.