ஆக்லாந்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவங்கள் அனைத்தும் ஆக்லாந்தின்  North Shore பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Northcote மற்றும் Pearn Crescent ஆகிய இடங்களில் உள்ள மூன்று வணிக நிலையங்கள் கொள்ளையர்களால் குறிவைக்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் ஒரு கடையை உடைக்க டொயோட்டா ஃபீல்டர் கார் பயன்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் இடம்பெற்று இருபது நிமிடங்களுக்குப் பிறகு, Wairau Valley என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக நிலையத்தின் ஜன்னல்கள் மற்றும் Constellation Drive பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் ஜன்னல்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில் பொலிஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது டேஷ்கேம் வீடியோ பதிவுகள் உள்ளவர்கள் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.