இன்று பிற்பகல் Rotorua வில் உள்ள வங்கி ஒன்றில் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னதாக Amohau தெருவில் உள்ள BNZ வங்கியில் நபர் ஒருவர் நுழைந்து மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்ததை அடுத்து பொலிசார் அழைக்கப்பட்டனர்.

15க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பொலிஸார் தளத்தில் இருந்ததாகவும், அருகில் உள்ள கடைகளில் உள்ளவர்கள் உள்ளேயே இருக்குமாறும் கூறியதாக சாலையின் குறுக்கே உள்ள கடை உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நபர் கைகளை உயர்த்தியபடி வெளியே வருவதைக் கண்டதாகவும், அவர் பொலிஸாரால் கைவிலங்கிடப்பட்டதாகவும் நேரில் பார்த்த மற்றொரு சாட்சி கூறினார்.

பணயக்கைதிகள் மாலை 4.50 மணியளவில் எவ்வித பாதிப்பும் இன்றி வங்கியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மாலை 5 மணியளவில், Amohau தெருவில் சுற்றிவளைப்புக்கள் உள்ள நிலையில், சம்பவ இடத்தில் உள்ள அவசர சேவை பணியாளர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாக பொலிசார் தெரிவித்தனர்.