ஆக்லாந்தின் வடக்கு துறைமுகத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் இரவு 8 மணியளவில் Haven கடற்கரைக்கும் Herald தீவுக்கும் இடையில் மீன்பிடி படகு ஒன்றின் அருகே குறித்த சடலத்தை கண்ட நபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

இந்நிலையில் சடலத்தை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் அந்த நபரின் பெயரை வெளியிட முடியவில்லை என்றும், இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.