வெலிங்டனுக்கு வடக்கே உள்ள Porirua என்ற இடத்தில் உள்ள Aotea கல்லூரி மாணவர்களின் தொலைபேசிகளுக்கு மிரட்டல் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதை அடுத்து NCEA பரீட்சைக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டனர்.

புதன்கிழமை காலை 10.30 மணியளவில் Aotea கல்லூரிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பள்ளியில் NZQA Level 1 Music, Level 2 Accounting மற்றும் Level 3 History தேர்வுகள் இன்று மதியம் பள்ளியில் நடைபெறவிருந்தன.

இந்நிலையில் மாணவர்கள் அருகிலுள்ள Mana கல்லூரியில் பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டதாக பள்ளியின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையின் ஆலோசனையின் பேரில் பள்ளி மூடப்பட்டதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் சுமார் 1.45 மணி முதல் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மாணவர்களை பள்ளியில் இருந்து Mana கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.