ஒடாகோவில் இன்று காலை ட்ரக் மற்றும் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Milburn அருகே உள்ள Waihola நெடுஞ்சாலையில் (SH1) இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கார் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாநில நெடுஞ்சாலை 1, Waihola மற்றும் Milburn இடையே மூடப்பட்டுள்ளது.

வாகன சாரதிகள் அப்பகுதியில் அவசர சேவைகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.