ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான New Lynn இல் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து 43 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று காலை 9.40 மணியளவில் New Lynn இன் Hutchinson வீதியில் உள்ள ஒரு வீட்டில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டது.

பின்னர் பாதிக்கப்பட்ட நபர் அருகிலுள்ள Great North சாலையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நவம்பர் 11ஆம் திகதி Waitakere மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று காவல்துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.