ஈரான் மற்றும் உக்ரைனில் உள்ள நிலைமையை எதிர்த்துப் போராடும் பல நூற்றுக்கணக்கான மக்கள் இன்று ஆக்லாந்தின் Aotea சதுக்கத்தில் ஒன்றிணைந்து, ஈரானிய ஆட்சிக்கு எதிராக தீர்மானம் எடுக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரேனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுதங்களை அனுப்பியதற்காக இந்த போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் ஆட்சியாளர்களை நியூசிலாந்தின் பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராட்ட அமைப்பாளர் சமிரா தகாவி கூறுகிறார்.

மேலும் ஈரானிய பொருளாதாரத் தடைகள் மசோதா அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்.