Nelson இல் காவல்துறையின் ஆபரேஷன் கோபால்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மோசமான கொள்ளை சம்பவம் தொடர்பில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் அக்டோபர் 23 ஆம் திகதி நபர் ஒருவரைத் தாக்கி, மிரட்டி, கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் தனது தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும்,
இதுபோன்ற அர்த்தமற்ற மிரட்டல் மற்றும் வன்முறைக்கு அவர் ஆளாவது நியாயமற்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்கு பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேடுதல் வாரண்ட் மேற்கொள்ளப்பட்டு மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மோங்ரெல் கும்பல் உறுப்பினர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் மீது கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நேற்றைய தினம் நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.