நேற்றைய தினம் இரண்டு வைகாடோ நகரங்களுக்கு இடையில் பள்ளி பேருந்தும் கார் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று காலை 7.37 மணியளவில் மாநில நெடுஞ்சாலை 39 இல் Pirongia மற்றும் Ngāhinapōuri இற்கு இடையே கார் மற்றும் Go bus என்ற பள்ளி பேருந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதாக ஒரு அறிக்கையில் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்திலேயே காரின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதி மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று காலை 7.20 மணி முதல் 7.45 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் எவரும் தகவல்களை வழங்குமாறு காவல்துறை இப்போது வேண்டுகோள் விடுத்துள்ளது.

105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 221102/6387 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.