ஹமில்டனில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Norton வீதி முகவரியில் மதியம் 12.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

ஆனால் சம்பவ இடத்தில் யாரும் இல்லை. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் காயம் அடைந்ததாகக் கருதப்படும் நபரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

என்ன நடந்தது என்பதை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.