Rotorua ஏரியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் அந்த நபரை முறையாக அடையாளம் காணும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் தண்ணீரில் சடலம்  மிதப்பதை கண்ட நபர் ஒருவர் பொலிசாருக்கு அறிவித்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தற்போது ஏரியில் இருந்து ஒரு உடலை மீட்டுள்ளனர் மற்றும் முறையான அடையாளம் காணும் பணி இப்போது நடைபெற்று வருகிறது.

மேலதிக விவரங்கள் கிடைத்தவுடன் வெளியிடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த சடலம் ஒரு வாரத்திற்கு முன்பு படகு ஓட்டும் போது காணாமல் போன பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணியாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.