நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் ரசிகர்கள்  மீளாத நிலையில், அவருடன் நடித்த மற்றொரு நடிகர் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் சிங்குடன், தோனி படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்த, சந்தீப் நாஹர் என்கிற பிரபலம் பிரபலம் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சந்தீப்  குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிஸார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.