Whangārei இல் நடந்த ஒரு கொலை தொடர்பில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் Whangārei இன் புறநகர் பகுதியான Onerahi இல் உள்ள ஒரு வீட்டில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் தற்போது 42 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று பிற்பகல் Whangārei மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.