நேற்று இரவு நேப்பியரில் 9 பேர் பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

இரவு 11.50 மணியளவில் Shakespeare சாலையில் இடம்பெற்ற குறித்த விபத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் காரில் பயணித்த 9 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஏழு பேர் காயமடைந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது, மற்ற 5 பேர் நிலையாக உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தீவிர விபத்து பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஷேக்ஸ்பியர் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.