டாஸ்மன் மாவட்டத்தில் இன்று சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி மேல் South Island நகரமான St Arnaud அருகே மதியம் 12.35 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் Arnaud இற்கு தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் 53 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

ஜியோனெட்டின் அறிக்கைப்படி, 3700 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது வடக்கே New Plymouth வரையிலும், தெற்கே கிறிஸ்ட்சர்ச் வரையிலும் உணரப்பட்டது.

சமூக ஊடகங்களில் பலர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ள நிலையில் சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

இதனிடையே இரண்டு வாரங்களுக்கு முன்பு St Arnaud இற்கு கிழக்கே நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானமை குறிப்பிடத்தக்கது.