Whangārei இன் Onerahi என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பொலிஸார் கொலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பிரிட்ஜெட் டோயல் கூறுகையில்..

"நேற்று பிற்பகல் 3 மணியளவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்."

"அந்த நபரின் அடையாளத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களை காவல்துறையால் தற்போது வழங்க முடியாது"

"Onerahi குடியிருப்பாளர்கள் எதிர்வரும் நாட்களில் அப்பகுதியில் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளின் இருப்பைக் காண்பார்கள்" என்றார்.

விசாரணைகள் இன்று தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 221027/5890 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.