வெலிங்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு வெளியே சுமார் 50 பேர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரானில் போராட்டக்காரர்கள் மீது பிரயோகிக்கப்படும் மிருகத்தனமான அடக்குமுறைகளை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகளை வைத்திருந்ததாகவும், கோஷமிட்டதாகவும், தலையில் அணிந்திருந்த துணிகளை எரித்ததாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஈரானில் தங்கள் உரிமைகளுக்காக நிற்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்காகத்தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் குர்திஷ் ஈரானிய பெண் மஹ்சா அமினி, ஹிஜாப்பை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறை அதிகாரிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக ஈரான் மற்றும் உலகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.